ஐம்பது வருடங்களில் என்னவெல்லாம் மாற்றங்கள் இருக்க முடியும்?
இடங்களில், மொழிகளில், தொழில்நுட்பங்களில், காலங்களில்,
உருவங்களில் இந்த மாற்றங்கள் இருந்துகொண்டே தான் இருக்கும்.
மாற்றங்களும் சூழ்நிலைகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.
விருப்பமிருந்தாலும் இல்லாவிட்டாலும் அனைவரும் கட்டாயமாக
இவைகளை கடந்துதான் ஆகவேண்டும்.
நாடுகளைத்தாண்டி பயணப்பட்ட குதிரைகள் இன்று சில்லறைக்காக
கடற்கறையில் சுற்றி சுற்றி வருகின்றன. கோட்டைகளை இடித்த
யானைகள் தெருக்களில் பிச்சை எடுத்து திரிகின்றன.
எல்லாவற்றையுமே எதிர்மறையாக ஒதுக்கி விடவும் முடியாது. தொழில்
நுட்பங்களின் அசுர வளர்ச்சி மனித வாழ்விற்கு உன்னதம்.
சுலபமாகவும், வேகமாகவும், அதிகமாகவும் ஒரு வேலையை செய்ய
உருவாக்கப்பட்டதே இயந்திரங்கள். எல்லா கண்டு பிடிப்புகளின் உள்ளேயும்
ஒரு சாத்தான் தன் பற்களை நற நற வென்று கடித்துக்கொண்டு எதற்கோ
காத்திருக்கிறது. பயன்களைக்காட்டிலும் எதிர்மறை விளைவுகளே
அதிகரித்துவருகின்றன.
இப்போதெல்லாம் மனிதன் அவனது தேவைகளை சார்ந்து இயங்குவதை விட அவனது சுயநலம் சார்ந்தே இயங்குகிறான்.இந்த சுயநல மாற்றங்கள்தான் அணுகுண்டைவிட ஆபத்தானவை. ஒவ்வொருநாளும் இந்த சுயநலங்களின் தேவைகளோ விருப்பங்களோ மலைபோல் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது.
எல்லா காலங்களிலுமே மனிதன் சுயநலவாதிதான். ஆனால் அதற்கு
அவன் குடுத்த மதிப்பு அப்போதெல்லாம் மிகக்குறைவு. தன் உலகம், தன்
நாடு, தன் ஊர், தன் குடும்பம் என எல்லாமே கொஞ்சம் கொஞ்சமாய்
சுருங்கி இப்போது அவன் சிந்திப்பது அவனுக்கும், பிள்ளைகளுக்கும்
மட்டுமே. அவன் பிள்ளைகளுக்கோ, அவர்களைத்தவிற யாருக்குமே
இடமில்லை.
மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான். ஆம், ஊத்தினான் என் முப்பாட்டன்.
அந்த மரத்தின் பலனை அவன் அனுபவிக்கப்போவதில்லை என தெரிந்தே
ஊற்றினான்.
அடுத்தடுத்த தலைமுறைகளும் மரங்களை வைத்து தண்ணீர்
ஊற்றினார்கள். கஷ்டப்பட்டு உழைத்தார்கள்.அவர்களும் அவர்களது
சுற்றத்தாரும் அனுபவித்தார்கள்.
நாம் உழைக்கவே இல்லை. ஆனால் அந்தப்பழங்கள் மட்டும் நமக்குத்தேவை.
நமது பிள்ளைகளுக்கும் பழங்கள் தேவை. பழங்கள் மட்டுமே தேவை. அது
இன்னொருவருக்கு உரிமையான பழமானாலும்.
இப்போதைய தலைமுறைக்கு பழங்கள் மட்டுமே கண்ணுக்கு தெரிகின்றன.
அதன் ருசியின் மேல் மட்டுமே ஆர்வம் இருக்கிறது. ஆனால் முளைத்து,
வளர்ந்து கிளைவிட்டு மரமாகி பூத்து, காய்த்து கனியும் வரை பொறுமை
இல்லை.இங்கே பழம் என்பது ஒரு குறியீடுதான். பழத்தை வெற்றி என்று
வைத்துக்கொள்ளலாம்.
இந்தக்கால குழந்தைகளுக்கு வெற்றி உடனடித்தேவை. வெற்றிக்கான உழைப்பை தருவதில்லை. கனியும் வரை காத்திருக்கவும் முடியாது. எல்லாவற்றிலும் முதலாக வேண்டும். புகழின் வெளிச்சம் தலைமேல்
விழவேண்டும். பலவருட உழைப்பிற்கும் சில நிமிட வேலைகளுக்கும்
வித்யாசம் தெரிவதில்லை. தோல்வியை ஒத்துக்கொள்ளும் மனநிலை
அறவே இல்லை. விட்டுக்கொடுத்தல் என்றால் கிலோ என்ன விலை?
சூழ்நிலையின் மூலம் கற்றுக்கொள்ளும் சுயநலத்தைக்கூட
கட்டுப்படுத்திடமுடியும். குழந்தைகள் சுயமாகவே சுயநலவாதிகளாய்
வளர்வதின் காரணங்களை அறிந்துகொள்ளவே முடியவில்லை.
இவைகள் எதன் தொடர்ச்சி? அல்லது எதன் மிச்சம்?
இந்த சுயநலவாத மாற்றங்களை பார்க்கும் பார்வையாளனாய் இருக்கும்
கையறு நிலைக்கு வழிதான் என்ன?
என்ன செய்யப்போகிறோம்?
HAPPY NEW YEAR......:)
இடங்களில், மொழிகளில், தொழில்நுட்பங்களில், காலங்களில்,
உருவங்களில் இந்த மாற்றங்கள் இருந்துகொண்டே தான் இருக்கும்.
மாற்றங்களும் சூழ்நிலைகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.
விருப்பமிருந்தாலும் இல்லாவிட்டாலும் அனைவரும் கட்டாயமாக
இவைகளை கடந்துதான் ஆகவேண்டும்.
நாடுகளைத்தாண்டி பயணப்பட்ட குதிரைகள் இன்று சில்லறைக்காக
கடற்கறையில் சுற்றி சுற்றி வருகின்றன. கோட்டைகளை இடித்த
யானைகள் தெருக்களில் பிச்சை எடுத்து திரிகின்றன.
எல்லாவற்றையுமே எதிர்மறையாக ஒதுக்கி விடவும் முடியாது. தொழில்
நுட்பங்களின் அசுர வளர்ச்சி மனித வாழ்விற்கு உன்னதம்.
சுலபமாகவும், வேகமாகவும், அதிகமாகவும் ஒரு வேலையை செய்ய
உருவாக்கப்பட்டதே இயந்திரங்கள். எல்லா கண்டு பிடிப்புகளின் உள்ளேயும்
ஒரு சாத்தான் தன் பற்களை நற நற வென்று கடித்துக்கொண்டு எதற்கோ
காத்திருக்கிறது. பயன்களைக்காட்டிலும் எதிர்மறை விளைவுகளே
அதிகரித்துவருகின்றன.
இப்போதெல்லாம் மனிதன் அவனது தேவைகளை சார்ந்து இயங்குவதை விட அவனது சுயநலம் சார்ந்தே இயங்குகிறான்.இந்த சுயநல மாற்றங்கள்தான் அணுகுண்டைவிட ஆபத்தானவை. ஒவ்வொருநாளும் இந்த சுயநலங்களின் தேவைகளோ விருப்பங்களோ மலைபோல் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது.
எல்லா காலங்களிலுமே மனிதன் சுயநலவாதிதான். ஆனால் அதற்கு
அவன் குடுத்த மதிப்பு அப்போதெல்லாம் மிகக்குறைவு. தன் உலகம், தன்
நாடு, தன் ஊர், தன் குடும்பம் என எல்லாமே கொஞ்சம் கொஞ்சமாய்
சுருங்கி இப்போது அவன் சிந்திப்பது அவனுக்கும், பிள்ளைகளுக்கும்
மட்டுமே. அவன் பிள்ளைகளுக்கோ, அவர்களைத்தவிற யாருக்குமே
இடமில்லை.
மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான். ஆம், ஊத்தினான் என் முப்பாட்டன்.
அந்த மரத்தின் பலனை அவன் அனுபவிக்கப்போவதில்லை என தெரிந்தே
ஊற்றினான்.
அடுத்தடுத்த தலைமுறைகளும் மரங்களை வைத்து தண்ணீர்
ஊற்றினார்கள். கஷ்டப்பட்டு உழைத்தார்கள்.அவர்களும் அவர்களது
சுற்றத்தாரும் அனுபவித்தார்கள்.
நாம் உழைக்கவே இல்லை. ஆனால் அந்தப்பழங்கள் மட்டும் நமக்குத்தேவை.
நமது பிள்ளைகளுக்கும் பழங்கள் தேவை. பழங்கள் மட்டுமே தேவை. அது
இன்னொருவருக்கு உரிமையான பழமானாலும்.
இப்போதைய தலைமுறைக்கு பழங்கள் மட்டுமே கண்ணுக்கு தெரிகின்றன.
அதன் ருசியின் மேல் மட்டுமே ஆர்வம் இருக்கிறது. ஆனால் முளைத்து,
வளர்ந்து கிளைவிட்டு மரமாகி பூத்து, காய்த்து கனியும் வரை பொறுமை
இல்லை.இங்கே பழம் என்பது ஒரு குறியீடுதான். பழத்தை வெற்றி என்று
வைத்துக்கொள்ளலாம்.
இந்தக்கால குழந்தைகளுக்கு வெற்றி உடனடித்தேவை. வெற்றிக்கான உழைப்பை தருவதில்லை. கனியும் வரை காத்திருக்கவும் முடியாது. எல்லாவற்றிலும் முதலாக வேண்டும். புகழின் வெளிச்சம் தலைமேல்
விழவேண்டும். பலவருட உழைப்பிற்கும் சில நிமிட வேலைகளுக்கும்
வித்யாசம் தெரிவதில்லை. தோல்வியை ஒத்துக்கொள்ளும் மனநிலை
அறவே இல்லை. விட்டுக்கொடுத்தல் என்றால் கிலோ என்ன விலை?
சூழ்நிலையின் மூலம் கற்றுக்கொள்ளும் சுயநலத்தைக்கூட
கட்டுப்படுத்திடமுடியும். குழந்தைகள் சுயமாகவே சுயநலவாதிகளாய்
வளர்வதின் காரணங்களை அறிந்துகொள்ளவே முடியவில்லை.
இவைகள் எதன் தொடர்ச்சி? அல்லது எதன் மிச்சம்?
இந்த சுயநலவாத மாற்றங்களை பார்க்கும் பார்வையாளனாய் இருக்கும்
கையறு நிலைக்கு வழிதான் என்ன?
என்ன செய்யப்போகிறோம்?
HAPPY NEW YEAR......:)
அருமையான பதிவு..
ReplyDelete